Thursday, June 08, 2006

sweet nothings



கண்ணாடி என்பதற்கு
அர்த்தம் கேட்டாய்
கண்கள் என்றேன் - மறுத்து விட்டு
கவிதை என்றாய்

பூக்களுக்கு வேறு பெயர் கேட்டாய்
உன் புன்னகை என்றேன்
தவறென்று தலையாட்டி - புல்லின் மேல்
பனித்துளி என்றாய்

வெட்கத்திற்கு எதிர்ச்சொல் கேட்டாய்
நீ என்றேன்...
அடித்து விட்டாய்!

முத்தத்திற்கு விளக்கம் கேட்டாய்
எனக்கெதற்கு வம்பு...?
தெரியாது என்றேன்!
வெட்கத்தோடு தலை குனிந்து
வேகமாய்க் கேட்டாய்...
"கற்றுத் தரவா?" என்று.

Categories:


Tell-a-Friend©
>

11 Comments:

Blogger Thats Secret said...

test

5:42 PM  
Blogger Dugi said...

thank you..:)

9:47 PM  
Blogger நாமக்கல் சிபி said...

அருமையான கவிதை கோகுல்.

11:17 PM  
Blogger கதிர் said...

கோகுல்,

//முத்தத்திற்கு விளக்கம் கேட்டாய்
எனக்கெதற்கு வம்பு...?
தெரியாது என்றேன்!
வெட்கத்தோடு தலை குனிந்து
வேகமாய்க் கேட்டாய்...
"கற்றுத் தரவா?" என்று.//

யாருங்க கோகுல்?

2:12 AM  
Blogger சீனு said...

பின்றாம்பா...பின்றாம்பா...note பன்னுங்கடா டேய்...note பன்னுங்கடா

11:48 PM  
Blogger பாலராஜன்கீதா said...

நீங்கள் உடனே வேகமாய்,
"கற்றுத் தர வா" என்றுதானே சொன்னீர்கள் ? :-)))

3:49 PM  
Blogger பிரசாத் said...

அருமை!!!

6:17 PM  
Blogger Unknown said...

http://enuyiree.blogspot.com/ intha gokul niingkala?

1:28 PM  
Blogger Unknown said...

http://enuyiree.blogspot.com/ intha gokul niingkala?

1:28 PM  
Blogger இளைய நிலா said...

அனைத்து கவிதை தொகுப்புகளும் மிகவும் அருமை..

2:17 PM  
Blogger Thats Secret said...

அனைவருக்கும் நன்றி.. zo வுக்கு அந்த கோகுல் நானில்லை..

10:21 PM  

Post a Comment

<< Home