ஊடல்

தெரு விளக்கிலிருந்து
வெளிச்சம் கடன் வாங்கும் மழை…
மழையில் குளிக்கின்ற
ஜன்னல் கம்பி…
கம்பியிலிருந்து தெறித்து – உன்
பாதம் நனைத்து மோட்சமடையும்
அமிழ்தத் துளி
அதனாலோ…எதனாலோ…
நீ கண் விழித்த போது – அந்தக்
குளிருக்கு சரியாகப் பொருந்தும்படிக்கு
என் மார்பின் மீதர்ந்திருந்த சூடான் உன் கைகள்,
என்னிடம் கிசுகிசுத்தன…
சிறிது நேரம் ஊடலைக் கைவிடுமாறு!
Categories: காதலி
0 Comments:
Post a Comment
<< Home