பேசக்கூடாது...

"நீ என் உயிர்த்தோழி" என்றேன்,
"மன்னியுங்கள்; உண்மையில்
எனக்கு உங்களை நினைவில்லை" என்றாய்
"நீ இல்லையேல்
நான் இறந்திடுவேன்" என்றேன்,
"மன்னியுங்கள்;முன் பின் அறிமுகமில்லாதவருக்கு
நான் உதவுவதில்லை" என்றாய்
"எனில் உனை இம்சிப்பதாய்
எனை தண்டிக்க வேண்டியது தானே" என்றேன்
ஓரக்கண்ணால் பார்த்து-குறும்பாய்
ஓருதட்டை சுழித்துச் சொன்னாய்:
"உனை தண்டித்திடலாம்;
நானெப்படி வலி பொறுப்பதாம்?"
Categories: காதலி,பெண் பால்
0 Comments:
Post a Comment
<< Home