மவுனம்

கதவு மூடியிருக்கிறது
நீயறிவாய்...வெளியே தான் நான் நிற்கிறேன்
உள்ளே தான் நீயிருக்கிறாய்...நானறிவேன்
பரிசோ, தண்டனையோ
பகிர ஏதோ ஒன்று
இருவரிடமுமே இருக்கிறது
நீ தட்டக் கூட வேண்டாம்
தட்ட வேண்டுமென நினைத்தாலே போதும்
கதவு திறந்து கொள்ளும்
பயமோ பரிதவிப்போ
நீ அமைதியாகவே இருக்கிறாய்
இன்னமும்...
கதவு மூடியே இருக்கிறது
Categories: பிரிவு