Friday, April 14, 2006

இலக்கணம்


எல்லோரிடமும் சொல்லியிருந்தேன்
கல்லூரியில் படித்த போது
எனக்கொரு தோழி இருந்தாள்
என்னை ஊக்குவித்த தேவதை
தோல்விகளில் கை கொடுத்தவள்
முயற்சிகளுக்கு உருவம் கொடுத்தவள்
நம்பிக்கைக்கு உயிர் கொடுத்தவள்
அந்த நல்ல நாளில் அறிமுகப்படுத்தினேன்
எல்லோர் முகத்திலும் ஏமாற்றம்
அப்புறம் தான் புரிந்தது...
அவர்களைப் பொறுத்தவரை,

'தேவதை என்பவள்
அழகாக இருப்பாள்!'

Categories:


Tell-a-Friend©
>

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home