Saturday, April 01, 2006

பரிச்சயம்



உன்னைப் பிரிந்த
மறு நாள் விடியலில் கூட,
படுக்கையில் நீ
சிரித்தது போலொரு பிரமை

பிரிவிற்கான காரணங்களை யோசிப்பதை
இப்போதும் தவிர்க்கிறேன்,
அவை விஸ்வரூபமெடுத்து
எனைக் கொல்லாதிருக்க...

ஜன்னலின் வழி உலகம் வெறிக்கும்
என்னை நோக்கி திரும்பிப்படுத்து
அதிகாலை குளிருக்கும் இன்ன பிற சுகங்களுக்குமாகத்துளிர்க்கும்
விலைமகளின் இதழோரப்புன்னகையில்
சில நொடிகள் அறையின் வெளிச்சத்தைக் கூட்டுகிறது...
உன் காதல்

Categories: ,


Tell-a-Friend©
>

0 Comments:

Post a Comment

<< Home